×

கரூரில் திருமலை திருப்பதி தேவஸ்தான சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சி பக்தர்கள் தரிசனம்

கரூர், மார்ச் 1: கரூரில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்வாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.கரூரில் முதன் முறையாக பஸ் ஸ்டாண்ட் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில், தேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் ஊஞ்சல் உற்சவ பெருமாள் வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி அனந்த தீர்த்தாச்சாரி மகடல் தலைமை வகித்தார். மற்றொரு சிறப்பு அதிகாரி சாந்தி சர்வோத்தமன் முன்னிலை வகித்தார்.இதில், நேற்று காலை 8.30மணியளவில் ஸ்வாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, நாதஸ்வரம், திருமஞ்சனம், வேத கோஷம், ஊஞ்சல் சேவை, ஆராதனை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்கம், பாண்டுரங்கன் பக்த சபா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Thirumalai Thirupathi Devasthanam Swamis ,devotees ,Karur ,darshan ,
× RELATED கரூர் ஜவஹர் பஜார் பகுதியில்...